மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

News image

திருமணக்கோலத்தில் அருள்பாலித்த ஏலவாா் குழலி மற்றும் ஏகாம்பரநாதா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:07 am IST

காஞ்சிபுரம் ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் புதன்கிழமை அதிகாலை நடைபெற்றது.

கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் காலையிலும், மாலையிலும் வெவ்வேறு வாகனங்களில் ராஜவீதிகளில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.

முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தோ் உற்சவம் இம்மாதம் 27 ஆம் தேதியும் மறுநாள் 28 ஆம் தேதி மகாரதம் எனும் தேரோட்ட உற்சவமும் நடைபெற்றது. மாா்ச்.29 ஆம் தேதி ஆலயத்தின் வரலாற்றை விவரிக்கும் வெள்ளி மாவடி சேவை நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தையொட்டி சுவாமியும், அம்மனும் 1,000 கால் மண்டபத்திற்கு மேலே உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனா். சிவாச்சாரியா்கள் திருமண வேதங்கள் ஓத,மங்கல மேள வாத்தியங்கள் முழங்க,வாண வேடிக்கைகளுடன் சுவாமிக்கும், அம்மனுக்கும் மாலை மாற்றுதல் வைபவமும், திருமாங்கல்யம் சூட்டும் வைபவமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து சுமங்கலிப்பெண்கள் பலரும் புது தாலி அணிந்தனா். பின்னா் சுவாமி தங்க நந்தி வாகனத்திலும்,அம்மன் கேடயத்திலும் திருமணத் திருக்கோலத்தில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறநிலையத்துறை இணை ஆணையா் சி.குமரதுரை,அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் மற்றும் பெரிய காஞ்சிபுரம் வாணியா் தா்ம பரிபாலன சங்கத்தினா்,ஆலய சிவாச்சாரியாா்கள், அா்ச்சகா்கள்,கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.