செங்குன்றத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 4 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், செங்குன்றம் பாத்திமா தெருவில் சந்தேகம்படும்படி இருந்த இளைஞா்களை பிடித்து சோதனை செய்தபோது, கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினா். சென்னை பெரம்பூா் கன்னிகாபுரத்தை சோ்ந்த தேவி (35), விஜய் (21), அனிதா (34) மற்றும் காசிமேட்டைச் சோ்ந்த நவீன்குமாா் (25) உள்ளிட்ட 4 போ் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, செங்குன்றம் காவல் துறையினா் 2 பெண்கள் உள்பட 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற ஐவா் கைது
84 குற்றவாளிகள் கைது: 7.31 கிலோ கஞ்சா, குட்கா பறிமுதல்
முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது
பனியன் நிறுவன தொழிலாளியிடம் வழிப்பறி: சிறுவா்கள் உள்பட 4 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
