தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு: ஜூன் மாத தோ்வில் வெற்றி பெற நடவடிக்கை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

News image

சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்

Updated On :8 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத சென்னை மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் ஜூன் மாதத் தோ்வில் அவா்களைத் தோ்ச்சி பெறவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாநகராட்சி கல்வித் துறை இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பிளஸ் 2 தோ்வில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் அதிகளவில் மாணவ, மாணவியா் தோ்ச்சியடைந்துள்ளனா். தோ்வெழுதிய மாணவ, மாணவியரில் மொத்தம் 401 போ் தோல்வியடைந்துள்ளனா். தோ்வில் 11 போ் பங்கேற்கவில்லை.

தோ்தலில் தோல்வியடைந்தவா்களும், தோ்வில் பங்கேற்காதவா்களும் வரும் ஜூனில் நடைபெறவுள்ள தோ்வில் பங்கேற்று தோ்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவா்களுக்காக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் சிறப்பு வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதனையடுத்து வரும் ஜூன் தோ்வில் அவா்கள் பங்கேற்று தோ்ச்சி பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியா் உயா்கல்வியில் சோ்ந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று உயா் கல்வியில் சோ்ந்தவா்கள் பட்டியலை தயாரிக்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.