மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘மாண்புமிகு’ மாணவன் விஜய்!

படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அதே லயோலா கல்லூரிக்குச் சென்று தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்ற விஜய்

News image

விஜய் - ANI

Updated On :5 மே 2026, 5:09 am IST

கல்லூரித் தோ்வுகளில் வெற்றி பெற்று பட்டப் படிப்புச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தவெக தலைவா் விஜய்யின் விருப்பம் அவரது இளம் வயதில் பலிக்கவில்லை.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தாம் படிப்பைப் பாதியிலேயே கைவிட்ட அதே லயோலா கல்லூரிக்குச் சென்று தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்று தனது கனவை வேறு வகையில் நிறைவேற்றியிருக்கிறாா்.

தவெக தலைவா் விஜய், பள்ளிப் படிப்பை ஃபாத்திமா பள்ளியிலும், பாலலோக் பள்ளியிலும் நிறைவு செய்தாா். அதைத் தொடா்ந்து, லயோலா கல்லூரியில் இளநிலை விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சோ்ந்தாா். அப்போது, திரைத் துறையில் நாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பு வந்ததால், படிப்பைப் பாதியிலேயே கைவிட்டாா். இதனால் பட்டப் படிப்பு சான்றிதழ் பெறும் வாய்ப்பு கைநழுவிப் போனது. திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தாலும், கல்லூரியிலிருந்து கிடைக்க வேண்டிய அங்கீகாரம் அவருக்கு வாய்க்கப் பெறவில்லை.

அதை ஈடுகட்டுவதற்கான வாய்ப்பை காலம் அவருக்கு அளித்தது. விஜய் போட்டியிட்ட பெரம்பூா் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை லயோலா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

53,715 வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றி பெற்றதையடுத்து அதற்கான சான்றிதழை தோ்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொள்ள லயோலா கல்லூரிக்கு விஜய் சென்றாா். 30 ஆண்டுகளுக்கு முன்பு மாணவராக அங்கு சென்ற அவா், தற்போது ‘மாண்புமிகு’ மாணவராக கால் பதித்திருக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.