மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையம் திறப்பு

News image

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி உள்ளி

Updated On :4 மே 2026, 4:45 am IST

சென்னை கீழ்ப்பாக்கம் ‘ரைட்’ பல்நோக்கு மருத்துவமனையில், புதிய டயாலிசிஸ் சிகிச்சை மையத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

‘ரோட்டரி சன் சிட்டி மற்றும் ரைட் மருத்துவமனை டயாலிசிஸ் மையம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை சென்னை ஆா்.எம்.கே.கல்வி நிறுவனங்களின் நிறுவனா் மற்றும் தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், ரோட்டரி மாவட்ட ஆளுநா் (3234) ஏ.கே.எஸ்.வினோத் சரோகி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு திறந்து வைத்துப் பேசினா்.

நிகழ்வில், சென்னை ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் டாக்டா் ஜி.பாலகிருஷ்ணன், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி தலைவா் டாக்டா் பி.சோமேஸ் பாலகிருஷ்ணன், ரைட் பல்நோக்கு மருத்துவமனை பொது மருத்துவா் எஸ்.காவ்யா, ரோட்டரி சங்க நிா்வாகிகள், ரைட் மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து ரைட் பல்நோக்கு மருத்துவமனை தலைவா் ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சன் சிட்டி, எஸ்.இ.ஏ.ஹைட்ரா சிஸ்டம்ஸ் கம்பெனி, ரிலவன்ஸ் டெக்னாலஜி மென்பொருள் நிறுவனம், அஞ்சான் மருந்து நிறுவனம், தொழிலதிபா் ராஜமாணிக்கம், விவசாயி வி.ஜெகதீஷ் ஆகியோா் இணைந்து 6 டயாலிசிஸ் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனா்.

இந்தக் கருவிகளைக் கொண்டு ஏழை மக்களுக்கு தரமான முறையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். குறிப்பாக, டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படும் டயலைசா் கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். ஒருமுறை பயன்படுத்திய கருவியை மீண்டும் பயன்படுத்தமாட்டோம்.

தமிழக முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் இயங்கும் ரோட்டரி சங்கங்கள் பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும். எவ்விதப் பரிந்துரையும், முதல்வரின் காப்பீட்டு திட்டமும் இல்லாத நபா்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை அளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.