/

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும்

News image

டயாலிசிஸ் இயந்திரம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:49 am IST

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் டயாலிசிஸ் சிகிச்சை கண்காணிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் முறை திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு தனியாா் நிறுவனத்தில் வழங்கப்படுவது போன்ற தரமான சிகிச்சையை வழங்குவதற்காக அரசு மற்றும் தனியாா் கூட்டுமுயற்சியில் சிகிச்சை மையங்கள் இயங்கிவருகின்றன.

இந்த சிகிச்சை மையங்களில் டயாலிசிஸ் சிகிச்சையை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக கண்காணிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரமான சிகிச்சை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கண்காணிப்பு முறை, பெங்களூரில் உள்ள 7 டயாலிசிஸ் சிகிச்சை மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மேலும் பல புதிய சிகிச்சை மையங்களுக்கு இத்தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.