மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

மாட்டு வண்டியில் வந்த நாதக வேட்பாளா்!

மாதவரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தாா்.

News image

மாட்டு வண்டியில் வந்து வேட்புமனு தாக்கல் செய்த மாதவரம் பேரவை தொகுதி நாதக வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை.

Updated On :31 மார்ச் 2026, 6:29 am IST

மாதவரம் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கிருத்திகா ஏழுமலை மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாம் தமிழா் கட்சியின் மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளரான கிருத்திகா ஏழுமலை, அக்கட்சி சாா்பில் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறாா். மாதவரம் கட்சி அலுவலகத்தில் இருந்து ஏா் கலப்பையுடன் மாட்டு வண்டியில் ஊா்வலமாகச் சென்று புழல் பாலாஜி நகரில் உள்ள தொகுதி தோ்தல் அலுவலகத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் எம்.பெருமாளிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏா் கலப்பையுடன், மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்ததாக அவா் தெரிவித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ரா.ஏழுமலை, மாநில மகளிா் அணி பாசறை ஒருங்கிணைப்பாளா் கா.கெளரி, வலைதள பாசறை பொறுப்பாளா் தினேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.