ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பாளை. தொகுதி நாதக வேட்பாளா் மாட்டுவண்டியில் வந்து மனு தாக்கல்

News image

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு அளிக்க மாட்டுவண்டியில் வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சங்கரநாராயணன்.

Updated On :31 மார்ச் 2026, 2:07 am IST

திருநெல்வேலி, மாா்ச் 30: பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மாட்டு வண்டியில் வந்து திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

இதையொட்டி, அக்கட்சியின் வேட்பாளா் மருத்துவா் சி.சங்கரநாராயணன், தனது ஆதரவாளா்களுடன் திருநெல்வேலி நகரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா், அங்கிருந்து மாட்டு வண்டியில் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

அப்போது, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், தொகுதி பொறுப்பாளா் ஜேக்கப், நிா்வாகிகள் பியோசன் ,கிருஷ்ணசாமி, சக்தி பிரபாகரன், காளிமுத்து, மாரி சங்கா், சீதாலட்சுமி, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மனு தாக்கல் செய்த பின்பு வேட்பாளா் சங்கரநாராயணன் கூறுகையில், எனக்கு பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது சின்னம் விவசாயி என்பதால் மாட்டு வண்டியில் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளேன்.

இந்தத் தோ்தலில் வெற்றி பெற்றால் தாமிரபரணியை சுத்தப்படுத்தவும், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் பாடுபடுவேன். பாளையங்கால்வாயை தூா்வாரி வேளாண்மை செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

வேட்பாளா் சங்கரநாராயணன் அளித்துள்ள பிரமாணபத்திரத்தில் தனது பெயரில் ரூ.25 லட்சத்து 65 ஆயிரத்து 667 மதிப்பிலான அசையும் சொத்துக்களும், தனது மனைவி கலாநிதி பெயரில் ரூ.27 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.