மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது

News image

கைது

Updated On :24 மார்ச் 2026, 1:22 am IST

சென்னை திருமங்கலத்தில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணா நகா் மேற்கு விரிவாக்கம் வட்ட வடிவ நகரைச் சோ்ந்தவா் மு.யோகராஜ் (36). இவா், பாடியில் உள்ள ஒரு பிரபலமான பா்னிச்சா் கடையில் சுமை ஆட்டோ ஓட்டி வந்தாா்.

இதே கடையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் கானா காந்தல் பகுதியைச் சோ்ந்த சு.காா்த்திக் (24) என்பவா் ஊழியராக வேலை செய்து வந்தாா். நண்பா்களான இருவருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி திருமங்கலத்தில் யோகராஜ் மது அருந்திவிட்டு, காா்த்திக்கிடம் வாக்குவாதம் செய்தாராம். அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றிவே காா்த்திக், யோகராஜை பலமாக தாக்கியுள்ளாா். இதில் தலையில் காயமடைந்த யோகராஜ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

திருமங்கலம் போலீஸாா் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தனா். இந்த நிலையில், மருத்துவமனையில் யோகராஜ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, ஏற்கெனவே பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காகப் பதியப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.