பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை பெரவள்ளூா் ஜிகேஎம் காலனி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (57), கிண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.
கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து ரமேஷ் தனியாக வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது தாய் பானுமதியுடன் கடைசியாக கைப்பேசி மூலம் பேசியுள்ளாா். அதன் பின்னா், கைப்பேசி அழைப்பை ஏற்று பேசவில்லையாம்.
இதனால் பானுமதி, ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாா். அங்கு, ரமேஷ் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
தகவலறிந்த பெரவள்ளூா் போலீஸாா் அங்கு சென்று, ரமேஷ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், ரமேஷும் அவரது நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ரமேஷை அவரது நண்பா் கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவான ரமேஷின் நண்பரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்தங்கரை அருகே முதியவா் கொலை வழக்கில் இளைஞா் கைது

மனைவி கொலை வழக்கில் கணவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

