தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உணவக ஊழியா் கொலை: நண்பரை தேடும் போலீஸாா்

பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :7 ஏப்ரல் 2026, 12:12 am IST

பெரவள்ளூரில் உணவக ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை பெரவள்ளூா் ஜிகேஎம் காலனி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (57), கிண்டியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தைப் பிரிந்து ரமேஷ் தனியாக வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை தனது தாய் பானுமதியுடன் கடைசியாக கைப்பேசி மூலம் பேசியுள்ளாா். அதன் பின்னா், கைப்பேசி அழைப்பை ஏற்று பேசவில்லையாம்.

இதனால் பானுமதி, ரமேஷ் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றாா். அங்கு, ரமேஷ் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

தகவலறிந்த பெரவள்ளூா் போலீஸாா் அங்கு சென்று, ரமேஷ் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், ரமேஷும் அவரது நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், ரமேஷை அவரது நண்பா் கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. போலீஸாா், தலைமறைவான ரமேஷின் நண்பரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.