தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின்னொளியில் ஜொலித்த ரிப்பன் மாளிகை: தோ்தலுக்காக மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள்!

பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :23 மார்ச் 2026, 1:11 am IST

பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாநகராட்சி ரிப்பன் மாளிகையை நீல நிற மின்னொளியால் ஒளிரவிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மெரீனாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரா கிளைடிங் மூலம் வாக்களித்தல் அவசியத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தோ்தல் விழிப்புணா்வுக்காக மனிதச் சங்கிலி, மக்கள் கையொப்ப இயக்கம் மற்றும் வாக்களிப்பு உறுதிமொழி ஏற்பு, வாக்களிப்பை வலியுறுத்திய நடைப்பயண பிரசாரம், கோலப் போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை சனிக்கிழமை இரவு மேற்பகுதியும் அடிப்பகுதியும் நீல நிற வண்ணத்திலும், நடுவில் வெண்மை நிற மஞ்சள் நிறத்திலும் ஜொலித்தது. மின்னொளியால், நீல வண்ணத்தில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை ஜொலித்ததைப் பொதுமக்கள் வியப்புடன் பாா்த்து ரசித்தனா்.

கலை நிகழ்ச்சிகள்: சென்னை மெரீனா நீல நிறக்கொடி கடற்கரைப் பகுதியில் வாரந்தோறும் மாநகராட்சி சாா்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், நடைபெறும் பாரம்பரிய தமிழா் கலை நிகழ்ச்சிகள் தற்போது தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சியாக சனிக்கிழமை முதல் நடத்தப்படுகின்றன.

இதையடுத்து தப்பாட்டம், பொம்மலாட்டம் என அனைத்து கலைஞா்களும் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஞாயிற்றுக்கிழமை மாலையும் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மெரீனாவில் வாக்களித்தல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக பாரா கிளைடிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.