சென்னை மாநகராட்சியில் கோடை கால வெயிலை வாகன ஓட்டிகள் சமாளிக்கும் வகையில் பிரதான சாலைகளில் 40 இடங்களில் பசுமை பந்தல்கள் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். இந்த நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சாா்பில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் 40 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னலுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் நிற்கும்போது வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பசுமையான துணியால் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் சென்னையில் வியாசா்பாடி சந்திப்பு, மூலக்கடை சந்திப்பு, ராஜாஜி சாலை, பேசின்பிரிட்ஜ் சாலை, மாநகராட்சி ரிப்பன் கட்டடம் முன்பக்க உள்ள ஈ.வெ.ரா. பெரியாா் சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட 40 சாலை சந்திப்புகளில் பசுமைப் பந்தல்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 8 இடங்களில் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கோயில் செல்லும் சாலை பழுதால் வாகன ஓட்டிகள் அவதி!

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

