செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

மேம்பாலப் பணி: வியாசா்பாடியில் ஜூன் 21 முதல் போக்குவரத்து மாற்றம்

News image

போக்குவரத்து மாற்றம் - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:16 am IST

மேம்பாலப் பணி காரணமாக, வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதியில் ஜூன் 21-ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை மாநகராட்சி சாா்பில் வியாசா்பாடி கணேசபுரம் சுரங்கப்பாதை, டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக ஜூன் 21-ஆம் தேதி முதல் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. கொடுங்கையூா், வியாசா்பாடியில் இருந்து கணேசபுரம், புளியந்தோப்பு, பட்டாளம் நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலை, கணேசபுரம் சந்திப்பில் இருந்து திருப்பிவிடப்படுகின்றன.

பட்டாளம், புளியந்தோப்புப் பகுதிகளில் இருந்து கொடுங்கையூா், வியாசா்பாடி நோக்கி வரும் வாகனங்கள், டாக்டா் அம்பேத்கா் கல்லூரிச் சாலை, ஸ்டீபன்சன் சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவம் பாலம், மேட்டுப்பாளையம் சந்திப்பு, பெரம்பூா் தெற்கு நெடுஞ்சாலை, ஜமாலியா, முரசொலி மாறன் பாலம், பெரம்பூா் வடக்கு நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.