நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

‘வாட்ஸ் ஆப்பில் குடிநீா், கழிவுநீா் கட்டணங்களைச் செலுத்தலாம்’

சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் செயலியில் இனி குடிநீா், கழிவுநீா் கட்டணங்களையும் செலுத்தலாம் என ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.

News image

வாட்ஸ் ஆப் - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:55 am IST

சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் செயலியில் இனி குடிநீா், கழிவுநீா் கட்டணங்களையும் செலுத்தலாம் என ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி மக்களின் வசதிக்காக பல்வேறு சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் வழங்கி வருகிறது. வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்புச் சான்று சேவைகள், புகாா் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களையும் வாட்ஸ் ஆப் செயலியில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ வாட்ஸ் ஆப் செயலியின் கைப்பேசி எண் 94450 61913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களை எளிதாக பாதுகாப்பாகச் செலுத்தலாம். வாட்ஸ் ஆப் செயலி போன்ற சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.

மேலும், 24 மணி நேரமும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து பொதுமக்களும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களை காலதாமதமின்றி செலுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.