பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ் அனுப்பப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

News image

வாட்ஸ் ஆப்

Updated On :18 மே 2026, 4:37 pm IST

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ் அனுப்பப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழை வாட்ஸ் ஆப் செயலி மூலம் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பில், “ பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் கணினி வாயிலாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் பிடிஎஃப் வடிவத்தில் எளிதில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.

மேலும், 9445061913 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் பெற்றோர் பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 9445061913 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து ஹாய் அல்லது வணக்கம் என அனுப்பி, பிறப்புச் சான்றிதழ் தரவிறக்கம் என குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ் தரவிறக்கம் செய்யும் இணைப்பு அனுப்பப்படும்.

பொதுமக்கள் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Summary

Birth Certificates via WhatsApp: Chennai Corporation Commissioner Announces

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.