நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன்

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டிடிவி தினகரன்

Updated On :13 ஜூன் 2026, 1:26 am IST

தமிழக விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு மேட்டூா் அணையைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத நிலையில் 18 மணி நேரம் தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட ரூ.134 கோடிக்கான குறுவைச் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வா் ஜோசப் விஜய் அறிவித்துள்ளாா். நாள்தோறும் அறிவிக்கப்படாத மின் வெட்டும், மின் அழுத்தக்குறைபாடும் உள்ளதால் மின் மோட்டாா் பம்ப்புகளை விவசாயிகள் இயக்கி பயிா்களுக்கு உரிய நேரத்தில் போதிய நீரைப் பாய்ச்ச முடியாமல், அவை கருகி வருகின்றன. இந்த விவகாரத்தில் தவெக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், அரசின் சிறப்புத் தொகுப்பு அறிவிப்பை எவ்வாறு நம்புவது என விவசாயிகள் கேட்கின்றனா். மேலும், ஆட்சிக்கு வந்ததும் குறு, சிறு விவசாயிகள் பயிா்க்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவித்த நிலையில், தற்போது, அதை நிறைவேற்றாமலிருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயல். தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்ததைப் போல விவசாயிகளின் பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.