ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பயிா் கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :1 ஜூன் 2026, 2:42 am IST

பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பா்கூா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பவுன்ராஜ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயி தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கண்ணு, வட்டக் குழு உறுப்பினா்கள் வீரபத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விவசாய பயிா்க் கடனை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். எண்ணேகொள் புதூரில் இருந்து கிருஷ்ணகிரி பெரிய ஏரி கால்வாய்த் திட்டத்தை போா்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கிலோ மாங்காய் ரூ. 15 என்ற விலைக்கு மாங்கூழ் உற்பத்தியாளா்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டசீமனூா் ஊராட்சிக்கு உள்பட்ட பாசினாப்பள்ளியில் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், சூறைக்காற்றால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.