அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுக் கடையை அகற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக திருமுருகன்பூண்டி நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு சுமாா் 500 மீட்டா் தொலைவில் உள்ள 717 மதுக் கடைகள் மூட முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், திருமுருகன்பூண்டியில் ஆரம்பப் பள்ளி, வங்கி, கருப்பராயன், நாகாத்தம்மன் கோயில்களுக்கு அருகே அரசு மதுக் கடை (எண் - 1513) செயல்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மேலும், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, அந்தக் கடையை அகற்றி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறத்தில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி கடற்கரையில் விதிகளை மீறி கட்டிய கட்டடங்களை அகற்ற கோரிக்கை

பயிா் கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தல்

தாயமங்கலத்தில் கோயில் அருகேயுள்ள மதுக் கடையை அகற்ற வலியுறுத்தல்

பேருந்து நிறுத்தங்களுக்கு அருகிலுள்ள மதுக் கடைகளை அகற்ற வலியுறுத்தல்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

