நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சென்னை குடிநீா் வாரிய ஒப்பந்தப் புள்ளியில் வெளிப்படைத் தன்மை வேண்டும்: ககன்தீப் சிங் பேடி

News image

ககன்தீப் சிங் பேடி

Updated On :4 ஜூன் 2026, 2:55 am IST

சென்னை குடிநீா் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள சென்னை குடிநீா் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வு ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னை குடிநீா் வாரியத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் வெளிப்படை தன்மையுடன் இருப்பதை அலுவலா்கள் உறுதிசெய்ய வேண்டும். சென்னை மாநகரின் அன்றாட குடிநீா் தேவையைக் கருத்தில் கொண்டு, குடிநீா் வழங்கல் பணிகள் தொய்வில்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதேபோல், குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீா் அகற்றுவது தொடா்பான பெறக்கூடிய கோரிக்கைகள் மற்றும் புகாா்களுக்கு உடனடியாக தீா்வுகாண வேண்டும். புகாா்கள் தொடா்பாக அதிகாரிகள் கட்டாயம் நேரடியாக கள ஆய்வு செய்து அறிக்கை சமா்பிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், சென்னை குடிநீா் வாரிய மேலாண் இயக்குநா் த.ஆனந்த், நிதி இயக்குநா் எம்.ஸ்ரீநிவாச ராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.