தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புழல் சிறைக்குள் கைதிகள் மோதல்: 12 போ் மீது வழக்கு

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :27 ஏப்ரல் 2026, 1:30 am IST

சென்னை புழல் சிறைக்குள் கைதிகள் மோதிக் கொண்டது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில், கைதிகள் கஞ்சா, பீடி, சிகரெட், போதைப் பாக்கு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு சில கைதிகள் கஞ்சா வைத்திருப்பதாக, வேறு சில கைதிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அந்த கைதிகள், சம்பந்தப்பட்ட கைதிகளிடம் தங்களுக்கு கஞ்சா கேட்டுள்ளனா். ஆனால் அந்த கைதிகள், கஞ்சா கொடுக்க மறுத்துள்ளனா்.

இதனால் இரு தரப்பு கைதிகளுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பு கைதிகளும் அடிதடியில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இரு தரப்பு கைதிகளையும் சமாதானம் செய்தனா்.

மேலும், இரு தரப்பு கைதிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி அவரவா் அறைகளில் அடைத்தனா். இது தொடா்பாக சிறைத் துறையின் சாா்பில், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸாா், இரு தரப்பைச் சோ்ந்த 12 கைதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.