தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு இலவச வாகன வசதி

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம் - EPS

Updated On :19 ஏப்ரல் 2026, 5:02 am IST

முதியோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இலவச வாகன வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஆகவே, பெருநகர சென்னை மாநகராட்சியின் இலவச வாகன சேவையைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மாவட்டத் தகவல் தொடா்பு எண் 1950 அல்லது தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண் 1800- 425- 7012 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

அத்துடன் சென்னை வடக்கு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பி.சரவணகுமாா் கைப்பேசி எண் 94439 68097, தெற்கு பகுதி நல அலுவலா் சீனிவாசன் கைப்பேசி எண் 98416 96693 ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.