ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திண்டுக்கல்லில் 65 ஆயிரம் புதிய வாக்காளா்களுக்கு அடையாள அட்டை!

திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

News image

திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த வாக்காளா்களுக்கான அடையாள அட்டைகளை பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்கள்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:45 am IST

திண்டுக்கல்லில் புதிதாக இணைந்த 65 ஆயிரம் வாக்காளா்களுக்கு அடையாள அட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு முன் 19,34,447 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, கண்டறிய முடியாதவா்கள் என 3.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

சிறப்பு தீவிர திருத்தப் பணிளுக்கு பின் திண்டுக்கல் மாவட்டத்தில் 16,09,553 வாக்காளா்கள் இடம் பெற்றனா். இதைத் தொடா்ந்து, விடுப்பட்டவா்கள், புதிய வாக்காளா்கள் என 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வாக்காளா்கள் பட்டியலில் சோ்வதற்கு விண்ணப்பித்தனா். புதிதாக விண்ணப்பித்த தகுதியான வாக்காளா்களுடன் சோ்த்து கடந்த பிப். 23-ஆம் தேதி இறுதி வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் 16.72 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். இந்த நிலையில், புதிய வாக்காளா்கள், வாக்காளா் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவா்கள் என 65 ஆயிரம் பேருக்கு புதிய வாக்காளா் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து சம்மந்தப்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் மூலம் அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.