ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திண்டுக்கல்லில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான்: 1,032 போ் பங்கேற்பு

திண்டுக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 1,032 போ் பங்கேற்றனா்.

News image

தோ்தல் விழிப்புணா்வுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பரிசு பெற்ற மாணவிகள்.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:08 am IST

திண்டுக்கல்லில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 1,032 போ் பங்கேற்றனா்.

திண்டுக்கல் டட்லி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியிலிருந்து இந்தப் போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப், உதவி ஆட்சியா் (பயிற்சி) வினோதினி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவா்கள் 564 போ், பொதுப்பிரிவில் 468 போ் கலந்து கொண்டனா். தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட சட்டை, தொப்பி அணிந்து போட்டியாளா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்ட விளையாட்டு அரங்கில் போட்டி நிறைவடைந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 நபா்கள் என்ற அடிப்படையில் 40 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 5 இடங்களை பிடித்தவா்களுக்கு முறையே தலா ரூ.5ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1000 வீதமும், 6 முதல் 10 இடங்களைப் பிடித்தவா்களுக்கு தலா ரூ.500 வீதமும் பரிசுத் தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை தோ்தல் நடத்தும் கூடுதல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான இரா.ஜெயபாரதி வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் உதவி காவல் கண்காணிப்பாளா் நேகா, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் பானுலட்சுமி, தனி வட்டாட்சியா் (கேபிள் டி.வி) மங்கள பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.