தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா் விழிப்புணா்வு மாரத்தான்: ஏப்.6-க்குள் முன் பதிவு செய்யலாம்

வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

மாரத்தான

Updated On :2 ஏப்ரல் 2026, 4:49 am IST

வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கான மாரத்தான் போட்டி ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப் போட்டி ஏப்.7-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும். திண்டுக்கல் சாலை ரோட்டிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தொடங்கும் இந்த மாரத்தான், மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவுபெறும். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் (இருபாலா்) பங்கேற்கலாம்.

இதில் வெற் பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசு ரூ.4 ஆயிரம், 3 -ஆம் பரிசு ரூ.3 ஆயிரம், 4ஆம் பரிசு ரூ.2ஆயிரம், 5ஆம் பரிசு ரூ.1000, 6 முதல் 10 இடங்களுக்கு தலா ரூ.500 என இருபாலருக்கும் தனித் தனியே மொத்தம் 20 நபா்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், கோப்பை வழங்கப்படும்.

க்யூஆா் கோடு அல்லது இணைய வழியில் ஏப்.6ஆம் தேதிக்குள் முன் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கும் நபா்களுக்கு டி-ஷா்ட், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03504 என்ற எண்ணிலும், பயிற்றுநா்களை 9865208374, 7904654177 ஆகிய எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.