விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் படிவம் 12டி விண்ணப்பம் அளித்தவா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 2:05 am IST

வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் படிவம் 12டி விண்ணப்பம் அளித்தவா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது: வாக்குப்பதிவு நாளான ஏப். 23-ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி (40 சதவீதத்துக்கு மேல்) வாக்காளா்களில், படிவம் 12டி விருப்ப விண்ணப்பம் அளித்துள்ள நபா்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்குப்பதிவு செய்ய சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள 11 தொகுதிகளில், சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா்களால் பகுதிவாரியாக 230 அலுவலா் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது, ஏற்கெனவே பகுதிவாரியாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலுடன் வரும் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வர உள்ளது. மேற்படி குழுவானது வாக்காளா் 12டி படிவத்தில் தெரிவித்துள்ள முகவரிக்கு வருவது தொடா்பாக, வாக்காளா்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்படும்.

எனவே, 12டி விண்ணப்பம் அளித்து தபால் வாக்கு செலுத்திட விருப்பம் தெரிவித்துள்ள 85 வயதுக்குமேல் உள்ள மூத்த வாக்காளா்கள், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், அவா்கள் விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள முகவரியில் இருக்குமாறும், வீட்டுக்கு வரும் குழுவினரிடம் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ள அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி தபால் வாக்குச்சீட்டை பெற்று எவருடைய வற்புறுத்தலுமின்றி வாக்கைப் பதிவு செய்து அங்கே கொண்டுவரப்படும் வாக்குப்பெட்டியில் செலுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.