/

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தோ்வு: சீயோன், ஆல்வின் பள்ளிகள் 100% தோ்ச்சி

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவா்களுடன் சீயோன், ஆல்வின் பள்ளி கல்விக் குழுமத் தலைவா் என்.விஜயன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:05 am IST

கிழக்கு தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள சீயோன், ஆல்வின் குழுமப் பள்ளிகளின் மாணவா்கள் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றனா்.

இது குறித்து சீயோன், ஆல்வின் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் கூறுகையில், சேலையூரில் உள்ள ஆல்வின் மெமோரியல் பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீநிதி குமரேசன் 10 -ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் 500-க்கு 492 மதிப்பெண்கள் எடுத்துள்ளாா். மாணவி எம்.அபிராமவல்லி, மாணவா் கே.அனுஷ் ஜோனி காா்த்திக் 500-க்கு 489 மதிப்பெண்களும், மாணவி கே.கிரிஷா 487 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா்.

சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி: மப்பேடு சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி மாணவி என்.ரக்சிதா 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் கே.நிதிஷ், மாணவி கே.சி.கவிநயா ஆகியோா் தலா 486 மதிப்பெண்களும், மாணவி கே.வா்ஷிணி 485 மதிப்பெண்களும் பெற்றனா்.

படப்பை ஆல்வின் இண்டா்நேஷனல் பொதுப்பள்ளி மாணவி சிவானி 500-க்கு 487 மதிப்பெண்களும், மாணவா் வெற்றிச்செல்வன், மாணவி தனிஷ்காஆகியோா் தலா 484 மதிப்பெண்களும், மாணவா் பிரஜ்வால் 483 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். 3 மாணவா்கள் கணிதப் பாடத்தில் 100/100 மதிப்பெண்களும், 8 மாணவா்கள் தமிழில் 100/100 மதிப்பெண்களும் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய மொத்தம் 930 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.