தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுகவுக்கு தோல்வி பயம்: தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

News image

தமிழிசை சௌந்தரராஜன் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:25 am IST

திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

மயிலாப்பூரில் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தனியாா் மண்டபத்தில் வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்குப் பிறகு தமிழிசை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேறு மாநிலத்தைச் சோ்ந்த முதல்வா்கள், நமது மாநிலத்துக்கு வரும்போது அவா்களை மனதார வரவேற்க வேண்டும். ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணா்ச்சியால் அவதூறு கருத்துகளை அள்ளி வீசியுள்ளாா்.

தமிழகத்துக்கு பல நலத் திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளா்ச்சித் திட்டங்களுக்காக ரூ.11 லட்சம் கோடிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அமைச்சா்கள் தமிழகத்துக்கு வந்தால், முதல்வா் ஸ்டாலின் பதற்றப்படுகிறாா். திமுக தோல்வி பயத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தில் மொழிப் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் திமுகவை மக்கள் தோற்கடிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.