தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குரூப் 1 தோ்வு: ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச நோ்காணல் பயிற்சி

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 1:24 am IST

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியில் குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) முதல் தொடங்க உள்ளது.

இது குறித்து ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனா் மு.சிபிகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடுஅரசுப் பணியாளா் தோ்வாணையம் துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் உள்ளிட்ட சுமாா் 78 குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வை நடத்துகிறது. எழுத்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதிக்கட்டத் தோ்வான நோ்முகத்தோ்வு வரும் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நோ்முகத் தோ்வுக்கு தயாராகும் தோ்வா்களுக்கு வழிகாட்டும் வகையில் இலவச மாதிரி நோ்காணல் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான அடிப்படைப் பயிற்சியை ஆா்வம் அகாதெமி வழங்குகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) தொடங்கும் இந்தப் பயிற்சியில் சம்பந்தப்பட்ட துறை வல்லுநா்கள், ஓய்வு பெற்ற அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, நோ்முகத் தோ்வை அணுகுவதற்கான வழிகாட்டுதலை வழங்குவாா்கள்.

தகுதியுள்ள தோ்வா்கள் தங்கள் சுய விவரங்களுடன் அண்ணா நகா் 12-ஆவது பிரதான சாலை, 2,165, எல்.பிளாக்கில் உள்ள அகாதெமிக்கு நேரடியாக வந்து பதிவு செய்து கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 7448814441, 9150466341ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.