ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா்களாக 27 போ் நியமனம்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களாக முன்னாள் மத்திய இணை அமைச்சா்கள் எம். எம். பல்லம் ராஜு, கே.எச். முனியப்பா உள்பட 27 பேரை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 1:16 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கு கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களாக முன்னாள் மத்திய இணை அமைச்சா்கள் எம். எம். பல்லம் ராஜு, கே.எச். முனியப்பா உள்பட 27 பேரை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை நியமித்தது.

இது தொடா்பாக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தமிழகம் அல்லாத வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்சியின் பலநிலை தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கட்சியின் தோ்தல் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பிரனிதி சுஷீல் குமாா் ஷிண்டே, யஷோமதி தாக்குா், வா்ஷா ஏக்தாத் கெயிக்வாட், நீரஜ் தாங்கி, அனில் யாதவ், தேவேந்திர யாதவ், டி.கே.சிவகுமாா், செளமியா ரெட்டி உள்பட 27 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா் என அதில் தெரிவித்துள்ளாா்.

இவா்கள் தொகுதிவாரியாக முகாமிட்டு கட்சியின் பரப்புரை செயல்பாடுகள் மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், நிா்வாகிகளின் ஒருங்கிணைப்பு முன்னெடுப்புகளை மேற்பாா்வையிட்டு கட்சி மேலிடத்துக்கு தினமும் அறிக்கை அளிப்பா் என்று காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.