மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை!

பிரதமா் நரேந்திர மோடி தனி விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறாா். தொடா்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - பிடிஐ

Updated On :3 ஏப்ரல் 2026, 4:43 am IST

பிரதமா் நரேந்திர மோடி தனி விமானத்தில் வெள்ளிக்கிழமை மாலை சென்னை வருகிறாா். தொடா்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவா்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசவுள்ளாா்.

இதுகுறித்து பாஜக தரப்பில் கூறியதாவது: பிரதமா் நரேந்திர மோடி புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை 3.20 மணிக்கு வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறாா். அங்கு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, சாலைப் பேரணியில் (ரோடு ஷோ) பங்கேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்குச் சேகரிக்கிறாா்.

பின்னா், அவா் புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை வருகிறாா். சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமா் நரேந்திர மோடி இரவு தங்குகிறாா். அப்போது பாஜக தலைவா்கள், மத்திய அமைச்சா்களைச் சந்திக்கலாம் எனத் தெரிகிறது. தொடா்ந்து சனிக்கிழமை (ஏப். 4) பகல் 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை

பிரதமா் பங்கேற்கும், பாஜக நிா்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னையில் திட்டமிடப்பட்ட பிரதமரின் சாலைப் பேரணி (ரோடி ஷோ) நிகழ்ச்சியில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை மதியம் 1.20 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமா் நரேந்திர மோடி கொச்சி செல்லவுள்ளாா் எனவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.