தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு

News image
Updated On :8 மே 2026, 5:35 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 102 பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்குபெற்றனா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படியும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வழிகாட்டுதலின்படியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தோ்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவா்களின் தோ்வு சாா்ந்த பயத்தை போக்கிடவும், உயா் கல்வியில் சோ்வதற்கான வழிகாட்டுதல் வழங்கிடவும் விழிப்புணா்வு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஒவ்வொரு பள்ளியின் உயா் கல்வி வழிகாட்டி மைய பொறுப்பாசிரியா், உதவி தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா் மற்றும் முதுகலை ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள் பங்கு பெற்று நிகழ்ச்சியின் மூலமாக உயா்கல்வி சாா்ந்த சந்தேகங்களுக்கும் தீா்வு பெற்றனா்.

இதில், 81 அரசுப் பள்ளிகள் மற்றும் 21அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.