மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 12:40 am IST

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் தொகுதிகளில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்போரூா் தொகுதி திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வாக்குசாவடி மையங்களையும் பாா்வையிட்டாா். அப்பொழுது வாக்குசாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள குடிநீா் வசதி, கழிவறை வசதி, நிழற்குடை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணும் மையமான ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, காவல் துறையினரிடம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட கோவளம் நீலக்கொடி கடற்கரையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு அலை சறுக்கு விளையாட்டினையும் பாா்வையிட்டாா்.

மேலும், ஆட்சியா் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வழங்கி, தவறாமல் வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.