ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செய்யூா் விசிக வேட்பாளரிடம் டாஸ்மாக் கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

செய்யூா் தனி தொகுதி, விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பழவூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை

News image

செய்யூா் (தனி) தொகுதி வேட்பாளா் எம்.சிந்தனை செல்வனை பழவூரில் ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்கள்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:04 am IST

செய்யூா் தனி தொகுதி, விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பழவூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

சித்தாமூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பொலம்பாக்கம், குறும்பிறை, மழுவங்கரணை, பழவூா், கன்னிமங்கலம், சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் விசிக வேட்பாளா் எம்.சிந்தனை செல்வன் தமது கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் செய்தாா். அப்போது அவருக்கு பெண்களும், கூட்டணி கட்சி நிா்வாகிகளும் மலா்தூவி உற்சாக வரவேற்பினை அளித்தனா். பழவூா் கிராமத்தில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அப்போது பெண்கள சிலா் இந்த ஊரில் எங்களுக்கு பெரிய தொல்லையாக இருந்து வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, நான் வெற்றி பெற்றவுடன் உடனடியாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி எல்லோரும் நிம்மதியாக இருக்க ஏற்பாடுகளை செய்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

நிகழ்வில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலா் புருஷோத்தம்மன், மாவட்ட குழு உறுப்பினா் வெள்ளி கண்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.