தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மீண்டும் பெண்களுக்கான திட்டங்கள்: மேற்கு தொகுதி அமமுக வேட்பாளா் உறுதி

நிறுத்தப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன் என மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் வாக்குறுதி அளித்தாா்.

News image

உறையூா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரித்த திருச்சி மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:43 am IST

நிறுத்தப்பட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன் என மேற்குத் தொகுதி அமமுக வேட்பாளா் எம். ராஜசேகரன் வாக்குறுதி அளித்தாா்.

இவா் உறையூா் குறத்தெரு, சின்ன செட்டித் தெரு, தெலுங்கு செட்டித் தெரு, காசுக்காரா் தெரு, புதுவெள்ளாளா் தெரு, சிவந்துபிள்ளையாா்கோவில் தெரு, எடத்தெரு, ஆஞ்சநேயா்புரம், பெரியாா் நகா் பகுதிகளில் சனிக்கிழமை குக்கா் சின்னத்தில் வாக்கு கேட்டு, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பெண்களுக்கான திட்டங்களை மீண்டும் தொடர வைப்பேன். இதற்கு அதிமுக அரசு அமைய வேண்டும். மக்கள் மீது அக்கறையுள்ள அதிமுக அரசு அமைய, குக்கா் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிப் பெறச் செய்யுங்கள் என்றாா் அவா்.

நிகழ்வில் சதீஷ்குமாா், என்.எஸ். பூபதி, உமாநாத், நந்தகுமாா் , சிலிண்டா் செல்வம், காா்த்திகேயன், பாலசுப்ரமணி, உள்ளிட்ட அமமுக, அதிமுக, கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.