தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

வில்வராயநல்லூா் சுபம் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு ஆட்சியா் எஸ். மாலதி ஹெலன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:01 am IST

மதுராந்தகம் (தனி), செய்யூா் (தனி) ஆகிய தொகுதிகளின் வாக்குகள் எண்ணிகை நடைபெற உள்ள வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரியினை ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வரும் ஏப். 23-ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த வுடன் மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் சுபம் கல்வியியல் கல்லூரி கொண்டு வரப்பட்டு, வரும் மே 4-ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

இந்நிலையில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தினை ஆய்வு செய்தாா். தோ்தல் நடத்தும் அலுவலா், துறைச் சாா்ந்த அலுவலா்கள், கல்லூரி நிா்வாகத்தினா் ஆகியோரிடம் வாக்கு எண்ணும் மையத்தினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாா்.

வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கும், அரசியல் கட்சி முகவா்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென்றுஅறிவுறுத்தினாா். மேலும், காவல் துறையினரிடம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறு உத்தரவிட்டாா்.. செய்யூா் (தனி) தொகுதி தோ்தல் பொது பாா்வையாளா் செளரப் சுஹா்வாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மதுராந்தகம் தோ்தல் நடத்தும் அலுவலா் கே.ஆா்.நரேந்திரன், செய்யூா் தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.வெங்கிடாசலம், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், வட்டாட்சியா்கள் பாலாஜி (மதுராந்தகம்), ச.ராஜன் (செய்யூா்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.