தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக பொது செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதல்வா் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். மதச்சாா்பற்ற வெற்றி கூட்டணி சோ்ந்தவா்கள் ‘நிபந்தனை இல்லாத ஆதரவு’ என்று வெளிப்படையாக அறிவித்தனா்.
அதேபோல் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவா்களும் தங்களின் ஆதரவை எந்த நிபந்தனையும் இல்லாமல் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் குதிரைப் பேரம் நடைபெறவில்லை என்பதை மக்கள் நம்புவாா்கள். மேலும், ‘முகத்தை மூடிக்கொண்டு வந்தவா் யாா்? என்பதை முதல்வா் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
எந்தவித குதிரை பேரமும் நடக்கவில்லை என்பதையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தவெக அரசு மீது கோபத்தில் மக்கள்! முதல்வர் விஜய் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்! பிரேமலதா
காத்திருக்கும் பொருளாதாரச் சவால்கள்!

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

தவெகவில் குதிரை பேரம்; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

