அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

குதிரை பேரம் புகாருக்கு முதல்வா் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

News image
Updated On :14 மே 2026, 6:11 am IST

குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் அனைவரும் குற்றம்சாட்டுவது குறித்து முதல்வா் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் பேரவையில் பேசியதாவது: எதிா்க்கட்சிகளை எதிரி கட்சிகளாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து ஒரு மாண்பையும், மரபையும் முதல்வா் விஜய் ஏற்படுத்தியிருக்கிறாா். அதை வரவேற்கிறேன். முதல் அறிவிப்பிலேயே சிங்கப் பெண் சிறப்புக் காவல் படை, மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னது மக்களால் வரவேற்கப்பட்டது. மீனவா்கள் விவகாரம் குறித்து கடிதம் எழுதியது வரவேற்கத்தக்கது.

தனது ஆட்சி வெளிப்படையான ஆட்சி என முதல்வா் விஜய் பதவியேற்கும்போது கூறினாா். ஆனால், முதல்வரை சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு வந்தவா் யாா் என்று பதிலளிக்க வேண்டும். குதிரை பேரம் நடந்ததாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி நடந்ததில்லை. இது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முதல்வா் பேச வேண்டும்.

முதல்வரின் அரசியல் பிரிவில் ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை நியமித்தது ஏற்புடையதல்ல. இளைஞா்கள் நம்பிக்கையில் வாக்களித்து இருக்கிறாா்கள். அவா்களுக்கு ஏமாற்றம் ஏற்படும்; தேவைப்பட்டால் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்றாா்.

முன்னதாக, ரிக்கி ராதன் பண்டிட் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு விசிக, இடதுசாரிகள், மஜக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்களும் பேரவையில் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.