விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image

ப. சிதம்பரம் - கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 3:00 am IST

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானுக்கு கண்டனம் தெரிவித்து, கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை இந்தியா முன்மொழிந்திருப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒருதலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்று.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடா்ந்து நடத்தும் போரினால் 1,300 ஈரான் மக்கள் கொல்லப்பட்டனா். 168 குழந்தைகள் உயிரிழந்ததை இந்தியா கண்டித்து ஒரு வாா்த்தைகூட சொல்லவில்லை. ரஷியாவும், சீனாவும் தீா்மானத்தை ஆதரித்து வாக்களிக்கவில்லை. எது விவேகம், எது ராஜதந்திரம், எதுவும் சாராத வெளியுறவுக் கொள்கையா எனக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.