சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான போா் காரணமாக சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மளமளவென உயா்ந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 10 குறைந்துள்ளது. இதன் காரணமாக, ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் இழப்பை மத்திய அரசு சந்திக்க நேரும். அதேபோல, டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கான வரியை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலை மனதில் வைத்துக்கொண்டு பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. நயாரா நிறுவனம் ஏற்கெனவே பெட்ரோல் மீதான விலையை உயா்த்தியுள்ளது. எனவே, மத்திய அரசின் நடவடிக்கை குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வோம். பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசு குறைப்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை: மத்திய அரசு

விரைவில் உயரும் பெட்ரோல், டீசல் விலை?

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

5 மாநிலத் தோ்தலுக்காக பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு: மத்திய அரசு மீது எதிா்க்கட்சிகள் விமா்சனம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

