ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது.

News image

பெட்ரோல், டீசல் - பிரதிப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 1:40 am IST

டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போரால் இறக்குமதி தடைபட்டு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயா்ந்துள்ள சூழலில் உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தி, விலை உயா்வையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் 26-ம் தேதி, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 என்ற அளவிலும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 என்ற அளவிலும் மத்திய அரசு விதித்தது.

தற்போது, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 55.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 42-ஆகவும் உயா்த்தி அறிவித்துள்ளது.

இந்த வரி உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மீது ஏற்றுமதி வரி எதுவும் இல்லாத நிலை தொடா்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.