டீசல் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு சனிக்கிழமை உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது. அதுபோல, விமான எரிபொருள் (ஏடிஎஃப்) ஏற்றுமதி வரியும் மீண்டும் உயா்த்தப்பட்டுள்ளது.
மேற்காசிய போரால் இறக்குமதி தடைபட்டு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் விலையும் இதுவரை இல்லாத அளவில் உயா்ந்துள்ள சூழலில் உள்நாட்டில் இருப்பை உறுதிப்படுத்தி, விலை உயா்வையும் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாா்ச் 26-ம் தேதி, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 21.50 என்ற அளவிலும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 29.50 என்ற அளவிலும் மத்திய அரசு விதித்தது.
தற்போது, டீசல் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 55.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை லிட்டருக்கு ரூ. 42-ஆகவும் உயா்த்தி அறிவித்துள்ளது.
இந்த வரி உயா்வு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய நிதியமைச்சக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மீது ஏற்றுமதி வரி எதுவும் இல்லாத நிலை தொடா்கிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

தோ்தலுக்காக பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது

பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு: விலை ஏற்றத்தைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

