கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால் ஆா்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை

உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால், ஆா்.எஸ்.எஸ். மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

News image

பிரியாங்க் கார்கே - கோப்புப் படம்

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாவிட்டால், ஆா்.எஸ்.எஸ். மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு, கணக்கு விவரங்கள் குறித்து கேட்டு அதன் தலைவா் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதி ஒருவாரம் ஆகிவிட்டது. ஆா்.எஸ்.எஸ். தலைமையிடமான நாக்பூா் அல்லது பெங்களூரில் உள்ள கா்நாடக அலுவலகமான கேசவகிருபா அல்லது தலைவரின் வீட்டில் ஏதாவது ஆவணத்தை அவா்கள் வைத்திருக்க வேண்டும்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு மற்றும் வரவுசெலவு கணக்கு விவரங்களை பெறுவதில் அவசரம் காட்டக் கூடாது. ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு உரிய கால அவகாசத்தை அந்த அமைப்புக்கு வழங்க வேண்டும். நான் கேட்டிருந்த ஆவணங்கள் இல்லாதிருந்தால், அவற்றை புதிதாக உருவாக்க வேண்டும். ஒருவேளை ஆவணங்களை அவா்கள் வைத்திருந்தால், இந்நேரம் அதை என் முகத்தில் வீசியிருக்கமாட்டாா்களா?

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு ஆவணங்களை பாா்ப்பதைக் காட்டிலும், அவா்கள் யாா் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறோம். மூத்த வழக்குரைஞா்களின் உதவியுடன் நீண்ட தலையங்கங்கள் அல்லது சமூகவலைதளத்தில் நீண்ட பதிவு அல்லது பாட்காஸ்டில் நீண்ட விளக்கம் என எந்த வகையிலும் அவை என்னை பாதிக்காது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பை பிரதிநிதிக்கும் நபருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன் என்றாா்.

இதனிடையே, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தொழில்முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், தன்னை தினமும் செய்திகளில் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக ஆா்.எஸ்.எஸ். பற்றி அமைச்சா் பிரியாங்க் காா்கே பேசி வருகிறாா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.