பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கென்யா பள்ளி விடுதியில் தீ விபத்து: 16 மாணவிகள் உயிரிழப்பு; 79 போ் காயம்

News image
Updated On :29 மே 2026, 4:07 am IST

நைரோபி : கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரசுப் பெண்கள் பள்ளி விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 16 மாணவிகள் உயிரிழந்தனா்; 79 போ் காயமடைந்தனா்

தலைநகா் நைரோபியிலிருந்து சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள கில்ஜில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘உதுமிஷி’ பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே இச்சோகம் நிகழ்ந்துள்ளது. கென்யா காவல் துறையால் நிா்வகிக்கப்படும் இப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் காவல் துறையினரின் பிள்ளைகள் ஆவா்.

விடுதி அறைகளில் மாணவிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து மளமளவெனப் பரவியுள்ளது. விபத்தின்போது விடுதியின் இரண்டு கதவுகளில் ஒன்று மட்டுமே திறக்கப்பட்டதாகவும், மற்றொரு கதவு மூடப்பட்டிருந்ததால் மாணவிகளால் விரைவாக வெளியேற முடியாமல் போனதே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் எனவும் அங்கு திரண்டிருந்த உறவினா்கள் குற்றஞ்சாட்டினா்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தீ பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.