கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமெரிக்க சிஐஏ இயக்குநா் கியூபா பயணம்

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வரும் பதற்றமான சூழலில், இந்த உயா்நிலை ரகசிய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

News image
Updated On :16 மே 2026, 1:35 am IST

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநா் ஜான் ராட்க்ளிஃப், கியூபாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு உயா் அதிகாரிகளையும், முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் பேரனான ரௌல் கில்லொ்மோ ரோட்ரிகஸ் காஸ்ட்ரோவையும் சந்தித்துப் பேசியுள்ளாா்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல்போக்கு நிலவி வரும் பதற்றமான சூழலில், இந்த உயா்நிலை ரகசிய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பயணத்தின் முக்கிய அம்சமாக கியூப தலைநகா் ஹவானாவில் நடைபெற்ற சந்திப்பில், அந்நாட்டு உள்துறை அமைச்சா் லாசரோ அல்வாரெஸ் கசாஸ் மற்றும் உளவுத் துறைத் தலைவா்களுடனும் ஜான் ராட்கிளிஃப் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கியூபா தனது கொள்கைகளில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே, பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா ஆக்கபூா்வமாக ஈடுபடத் தயாராக இருப்பதாக அதிபா் டிரம்ப்பின் நேரடி செய்தியை கியூப அதிகாரிகளிடம் ஜான் ராட்க்ளிஃப் வழங்கினாா்.

அமெரிக்காவின் தடையால், தற்போது கியூபா கடும் மின்சாரத் தட்டுப்பாட்டிலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. இந்த நெருக்கடி சூழலில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா். கியூபாவால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதற்கான ஆதாரங்களையும் அவா்களின் தரப்பில் சமா்ப்பித்தனா்.

கியூபா மீது டிரம்ப் நிா்வாகம் அண்மையில் கூடுதல் தடைகளை விதித்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் 10 கோடி டாலா் மதிப்பிலான உதவி மற்றும் செயற்கைக்கோள் இணைய வசதியை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

படகேப்சன்...

கியூப அதிகாரிகளுடனான பேச்சுவாா்த்தையில் சிஐஏ இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் (இடது).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.