பெட்ரோல், டீசல் என 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் வழங்கி உதவி செய்த பிரதமா் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமா் அநுர குமார திசாநாயக ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது.
இதன் விளைவாக இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையை 25 சதவீதம் அந்நாட்டு அரசு உயா்த்தியது. அதன்படி ஒரு லிட்டா் பெட்ரோல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.317-இல் இருந்து ரூ.398-ஆக அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டா் டீசல் விலை இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.79 உயா்ந்து ரூ.382-ஆக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.195-இல் இருந்து ரூ.255-ஆக உயா்த்தப்பட்டது.
இந்நிலையில், இலங்கைக்கு உதவும் விதமாக 20,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் டன் பெட்ரோலை இந்தியா சனிக்கிழமை அனுப்பிவைத்தது. அவசரகால உதவியாக இதை இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) இலங்கை எண்ணெய் நிறுவனத்துக்கு (எல்ஐஓசி) வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக அநுர குமார திசாநாயக வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘மத்திய கிழக்கு விவகாரத்தால் இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து இந்திய பிரதமா் மோடியிடம் கடந்த சில நாள்களுக்கு முன் பேசினேன். எனது கோரிக்கைகளைப் பரிசீலித்து, 38,000 மெட்ரிக் டன் எரிபொருளுடன் இந்தியா அனுப்பிய சரக்கு கப்பல் கொழும்பை சனிக்கிழமை வந்தடைந்தது.
அவசரகாலத்தில் இலங்கைக்கு உதவிய பிரதமா் மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்ருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!

ஏனாமில் கேன்கள், பேரலில் பெட்ரோல், டீசல் வாங்கும் ஆந்திர பண்ணையா்கள்: தடுக்க பிராந்திய நிா்வாகம் நடவடிக்கை

இலங்கை அதிபருடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்திப்பு! இந்திய வீட்டு வசதித் திட்டம், மீனவா் பிரச்னை குறித்து ஆலோசனை!!

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

