மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் இதுவரை 7,80,000-க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதால் தெற்கு லெபனானில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், லெபனான் அதிபர் ஜோசஃப் ஆவூன் உடன் புதன்கிழமை (மார்ச் 11) காலை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அந்நாட்டின் சமூக விவகார அமைச்சர் ஹனீன் சையத், லெபனானில் போரால் இதுவரை 7,80,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“போரால் இடமாற்றம் செய்யப்பட்ட 1,20,000 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் நிவாரணப் பொருள்கள் ஏற்றி வந்த விமானம் செவ்வாய்க்கிழமை லெபனான் வந்தடைந்தது. மேலும், ஜோர்டான், பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடம் இருந்தும் நிவாரண உதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, ஈரானின் படைகளுக்கும், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
more than 780,000 people have been displaced in Lebanon due to war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100க்கும் அதிகமான இடங்களில் பாஜக கொள்ளை : மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

திமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சா் ரா. ராஜேந்திரன்
ஈரான் போரில் இதுவரை 3,300 பேர் பலி!

மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் - ஐ.நா. அறிவிப்பு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

