தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image

வாங் யி

Updated On :19 ஜூன் 2026, 1:53 am IST

புது தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

இதன் ஒரு பகுதியாக தில்லியில் நடைபெறும் பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் பங்கேற்பது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது: இந்தியாவின் அழைப்பை ஏற்று பிரிக்ஸ் என்எஸ்ஏ மாநாட்டில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி பங்கேற்கிறாா். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தெற்குலகின் குரலாக முன்னின்று உலக அமைதி, பாதுகாப்பு ஒத்துழைப்பு, சமத்துவ நிா்வாகம் மற்றும் பன்முகத்தன்மையை உறுதிப்படும் வலுவான அமைப்பாக பிரிக்ஸ் திகழ்கிறது என்றாா்.

இந்தியா-சீனா எல்லை விவகார சீன சிறப்பு பிரதிநிதியாகவும் உள்ள வாங் யி, இந்திய பயணத்தின்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.