தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களை சந்தித்தது பற்றி...

News image

பிரிக்ஸ் தலைவர்களுடன் பிரதமர் மோடி. - படம் - எக்ஸ் (நரேந்திரமோடி)

Updated On :1 மணி நேரம் முன்பு

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைவர்களை செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) சந்தித்தார்.

இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாடு, தில்லியில் ஜூன் 22 , 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இந்தியா சீனா, ரஷியா உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு நிகழாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

பிரிக்ஸ் நாடுகளுக்கான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி.

மாறிவரும் உலகச் சூழலில், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும், பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சவால்களை எதிர்கொள்வதிலும் பிரிக்ஸ் அமைப்பு ஒரு முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவின் தலைமைத்துவமானது, நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், உலகின் பாதுகாப்புக்கு பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Summary

Prime Minister Narendra Modi met the leaders at the BRICS National Security Advisors' meeting on Tuesday (June 23).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.