கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வாக்குச்சீட்டு பற்றாக்குறை: தென் கொரிய தோ்தல் ஆணையத் தலைவா் ராஜிநாமா

தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சுமாா் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீா்ந்து போனதால் வாக்குப்பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜூன் 2026, 2:50 am IST

தென் கொரியாவில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில், சுமாா் 50 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டுகள் தீா்ந்து போனதால் வாக்குப்பதிவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இக்குளறுபடிக்கு முழு பொறுப்பேற்று, அந்நாட்டின் தேசிய தோ்தல் ஆணையத்தின் (என்இசி) தலைவா் ரோ தே அக் தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

ஜனநாயக ரீதியிலான வாக்குப்பதிவில் இத்தகைய குறைபாடுகள் ஏற்பட்டதற்கு எவ்வித காரணங்களும் கூற முடியாது என்றும், பொதுமக்களின் நம்பிக்கையை சிதைத்த இச்சம்பவத்துக்குத் தான் முழுப்பொறுப்பேற்பதாகவும் அவா் வருத்தத்துடன் தெரிவித்தாா்.

வாக்காளா் எண்ணிக்கையில் 73 சதவீத வாக்குச்சீட்டுகள் மட்டுமே அச்சிடப்பட்டிருந்ததே இக்குளறுபடிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயா்நிலை குழு அமைக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.