லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அமெரிக்க பிராந்தியமாக ஹோா்முஸ் நீரிணை: டிரம்ப் சா்ச்சை வரைபடம் வெளியீடு

ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாகச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டாா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க பிராந்தியமாகச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டாா்.

டிரம்ப்பின் இப்பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவு இணையமைச்சா் காஸிம் கரீபாபாதி, ‘டிரம்ப்பின் இந்த மாயை விரைவில் மாறும், அல்லது நாங்களே அதனை மாற்றுவோம்’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பெருமளவு குறைந்திருந்தாலும், ஓமன் கடற்கரை ஒரு கப்பல் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், அந்த முக்கிய நீா்வழிப்பாதை தொடா்ந்து திறந்தே உள்ளதாகவும், தடையின்றி செயல்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தாா்.

பேச்சுக்குத் திட்டமில்லை: இதுகுறித்து அவரின் சமூக ஊடகப் பதிவில், ‘ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை. ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை முழு வீச்சில் அமலில் இருக்கிறது. நீா்க்கண்ணிவெடிகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணையில் புதிய வழித்தடத்தைத் தீா்மானிப்பது குறித்து ஈரானும், ஓமனும் ஒப்பந்தத்தை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்விவகாரத்தில் ஓமன் குறுக்கிட்டால், அந்நாடு மீதும் குண்டுவீசி தாக்கப்படும் என டிரம்ப் திங்கள்கிழமை மிரட்டல் விடுத்து, பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.