ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டதால், அவ்வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டதால், ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறக்கப்படுவதாக, கடந்த ஏப். 17 அன்று ஈரான் அரசு அறிவித்தது.
இதனை வரவேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் அந்நாட்டு கப்பல்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறுவதால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாகவும், அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் எனவும் சனிக்கிழமை அன்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல முயன்ற சரக்கு கப்பலின் மீது ஈரானின் ராணுவப் படகுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக, பிரிட்டனைச் சேர்ந்த கடல்சார் வணிகச் செயல்பாட்டு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் மாலுமிகள் மற்றும் பணியாளர்களின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அது எந்த நாட்டின் கப்பல் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், ஏராளமான நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
following the re-closure of the Strait of Hormuz, Iranian forces opened fire on a cargo ship.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹோர்முஸ் நீரிணை திறக்க ஈரான் விருப்பம்: டிரம்ப் பேச்சு

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த 10 இந்திய கப்பல்கள்! - மத்திய அரசு அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதில் சிக்கல்! ஈரான் பொருத்திய கண்ணிவெடிகள் மாயம்?

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


